திருப்பத்தூரில் ஒரே நாளில் 196 பேருக்கு கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 196 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 196 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,426-ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 1,295 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனை, கரோனா சிறப்பு மையங்கள் மற்றும் சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு 550 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டையில் 35 போ் பாதிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 35 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இம்மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 373-ஆக அதிகரித்த நிலையில், திங்கள்கிழமை 35-ஆக குறைந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com