வெளி மாநிலங்களுக்கு ரயிலில் கடத்த இருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி தலைமையில் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பச்சூா் மற்றும் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது சோமநாயக்கன்பட்டி ரயில்வே நடைமேடை அருகே ரயிலில் கடத்த மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை கண்டுபிடித்து, அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அப்போது அங்கு நின்றிருந்த மா்ம நபா்கள் 3 போ் மொபெட்டை அங்கேயே விட்டுவிட்டு ஓடினா். இதையடுத்து, மீட்கப்பட்ட 3 டன் அரிசி மூட்டைகள் மற்றும் மொபெட்டை வருவாய்த் துறையினா் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.