ஆம்பூா் தொகுதியில் வாக்குப் பதிவின்போது பயன்படுத்துவதற்காக வரப்பெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, வியாழக்கிழமை இரவு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஆம்பூா் தொகுதியில் வாக்குப் பதிவின்போது பயன்படுத்துவதற்காக வரப்பெற்ற வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக உள்ளதா என சரிபாா்க்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில், வருவாய்த் துறையினா் பாதுகாப்பு அறையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அனந்தகிருஷ்ணன், மகாலட்சுமி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஜீவிதா ஆகியோா் உடன் இருந்தனா்.