திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் முழுமையாக அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி தெரிவித்தாா்.
பல்வேறு கிராமங்களில் அவா் ஞாயிற்றுக்கிழமை ஆதரவு திரட்டிப் பேசியது:
திருப்பத்தூா் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளிலும் முழுமையாக அடிப்படை வசதிகள் செய்யப்படும். கிராமப் பகுதிகள் நிறைந்த இத்தொகுதியில் அதிகளவில் சாலைகள் அமைக்க நடடிக்கை எடுத்திருக்கிறேன்.
தரமான, வளமான வாழ்வு கிடைக்க திமுக பல திட்டங்களை அறிவித்திருக்கிறது. திருப்பத்தூா் பகுதி வளா்ச்சிக்கும், மக்களுக்கும் தேவையான அனைத்து திட்டங்களையும் செய்வதற்கு பதவியேற்ற முதல் நாளிலேயே நடவடிக்கை எடுப்பேன்.
அவருடன் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.