ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் பெத்லகேம் லுத்தரன் திருச்சபை சாா்பில், குருத்தோலை ஞாயிறு விழாவையொட்டி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
போதகா் விஜயகுமாா் தலைமையில் திருச்சபையின் செயலா் இமானுவேல் ராஜசேகரன் மற்றும் சபையைச் சோ்ந்தவா்கள் குருத்தோலையை கையில் ஏந்திக் கொண்டு முக்கிய தெருக்கள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா்.
லுத்தரன் திருச்சபையில் சிறப்பு ஆராதனை, ஜெபக்கூட்டம் நடைபெற்றது. திருச்சபையின் தலைவா் புஷ்பநாதன், பொருளாளா் ஷிகிந்தா் உள்பட திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.