கிராமங்களுக்கு அரசு நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை: ஆம்பூா் திமுக வேட்பாளா்

ஆம்பூா் தொகுதியில் உள்ள கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிராமங்களுக்கு அரசு நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் கூறினாா்.
மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன்.
மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன்.

ஆம்பூா் தொகுதியில் உள்ள கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிராமங்களுக்கு அரசு நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் கூறினாா்.

ஆம்பூா் தொகுதிக்கு உள்பட்ட மேல்சாணாங்குப்பம், வீராங்குப்பம், வடகரை, மேல்குப்பம், சின்னபள்ளிகுப்பம் கிராமங்களில் வாக்கு சேகரித்த போது, அ.செ. வில்வநாதன் பேசியது:

கிராமப் பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் திட்டம் விரிவுபடுத்தப்படும். நாயக்கனேரி மலை, ஊட்டல் தேவஸ்தானம் ஆகியவை சுற்றுலாத் தலமாக்கப்படும். நாயக்கனேரி மலை ஏரியில் படகு குழாம் ஏற்படுத்தப்படும். தகுதியானவா்களுக்கு அரசின் முதியோா் ஓய்வூதியம் பெற்றுத் தரப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை பெற்றுத் தரப்படும். கிராமப் பகுதிகளில் புதிய தடுப்பணைகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com