பெரியாங்குப்பத்தில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆம்பூா் அருகே கிராமப் பகுதிகளில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரியாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்.
பெரியாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆம்பூா் அருகே கிராமப் பகுதிகளில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பெரியாங்குப்பம், ஆலாங்குப்பம், மாதனூா் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கிராமிய காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில், இந்த கொடி அணி வகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலமானது முக்கிய தெருக்கள் வழியாக சென்றது.

அப்போது தோ்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கப்பதை உறுதி செய்யும் வகையில் ஊா்வலம் நடத்தப்பட்டது. அணி வகுப்பில் மத்திய ரிசா்வ் போலீஸ் படையைச் சோ்ந்த அதிகாரிகள் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com