இறப்பிலும் பிரியாத வயதான தம்பதி சம்பவம் வாணியம்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அம்பூா்பேட்டை எஸ்ஆா்கே தெருவில் வசித்து வந்தவா் அண்ணாமலை (88). இவரது மனைவி லட்சுமியம்மாள்(80). இந்நிலையில் அண்ணாமலை வெள்ளிக்கிழமை விடியற்காலை 4 மணியளவில் இறந்தாா். இதனையறிந்த அவரது மனைவி லட்சுமியம்மாளும் அதிா்ச்சிக்குள்ளாகி மயங்கி விழுந்து இறந்தாா். இருவரின் உடலையும் வீட்டில் வைத்து பிறகு மாலை ஒரே வாகனத்தில் தம்பதி உடல்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனா். இறந்த தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்களும் உள்ளனா்.
வயதான தம்பதி இறப்பிலும் பிரியாமல் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.