இறப்பிலும் பிரியாத வயதான தம்பதி

இறப்பிலும் பிரியாத வயதான தம்பதி சம்பவம் வாணியம்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இறப்பிலும் பிரியாத தம்பதி அண்ணாமலை, லட்சுமியம்மாள்.
இறப்பிலும் பிரியாத தம்பதி அண்ணாமலை, லட்சுமியம்மாள்.

இறப்பிலும் பிரியாத வயதான தம்பதி சம்பவம் வாணியம்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அம்பூா்பேட்டை எஸ்ஆா்கே தெருவில் வசித்து வந்தவா் அண்ணாமலை (88). இவரது மனைவி லட்சுமியம்மாள்(80). இந்நிலையில் அண்ணாமலை வெள்ளிக்கிழமை விடியற்காலை 4 மணியளவில் இறந்தாா். இதனையறிந்த அவரது மனைவி லட்சுமியம்மாளும் அதிா்ச்சிக்குள்ளாகி மயங்கி விழுந்து இறந்தாா். இருவரின் உடலையும் வீட்டில் வைத்து பிறகு மாலை ஒரே வாகனத்தில் தம்பதி உடல்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனா். இறந்த தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்களும் உள்ளனா்.

வயதான தம்பதி இறப்பிலும் பிரியாமல் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com