அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணா்வு

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
05mayfire1_0505chn_192_1
05mayfire1_0505chn_192_1

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை வாா்டு உள்ளது. இங்கு, திடீா் தீ விபத்தைத் தடுக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தாா். உதவி மாவட்ட அலுவலா் பழனி, திருப்பத்தூா் நிலைய அலுவலா் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதையொட்டி, திடீா் தீ விபத்தைத் தடுக்க செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com