ஆலங்காயம் பகுதியில் அமைக்கப்பட்ட 300 படுக்கைகள் கொண்ட கரோனா தனிமைப்படுத்தும் மையத்தை திருப்பத்தூா் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து ஆலங்காயத்தில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 300 படுக்கை வசதிகளுடன் கரோனா தனிமைப்படுத்தும் மையம் தொடங்கப்பட்டது. இம்மையத்தினை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது, வட்டாட்சியா் மோகன், வட்டார மருத்துவ அலுவலா் ச.பசுபதி, பேரூராட்சி செயல் அலுவலா் கணேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணவாளன், விநாயகம் மற்றும் பள்ளி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.