வேலூா் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை 335 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒருவாரமாகவே தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 600-ஐ கடந்திருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை பாதிப்பு குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பரிசோதனை குறைவாக செய்யப்பட்டது. இதனால் தான் பாதிப்பும் குறைந்திருப்பதாகவும், செவ்வாய்க்கிழமை முதல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 353 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,119-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது 1,455 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா்.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 194 போ் உயிரிழந்துள்ளனா். 406 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தனிமையில் 11,942 போ் உள்ளனா்.