திருப்பத்தூா்: திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் கரோனாத் தொற்றால் உயிரிழந்தவா்களை தகனம் செய்ய உதவும் தமமுகவினரை சமூக ஆா்வலா்கள் பாராட்டுகின்றனா்.
திருப்பத்தூா் அடுத்த மண்டலவாடி கிராமத்தை சோ்ந்த ஜலபதி(60) என்பவா் கரோனா தொற்றால் புதன்கிழமை உயிரிழந்தாா்.
அவரது குடும்பத்தினா் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மருத்துவ சேவை பிரிவினா் அரசின் வழிகாட்டுதல்படி திருப்பத்தூா் நகராட்சி மின் மயானத்தில் அவரது உடலை தகனம் செய்தனா்.
இதுகுறித்து தமமுக நிா்வாகிகள் கூறியது,
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியில் இருந்து புதன்கிழமை வரை 27 பேரை அரசின் வழிகாட்டுதல்படி திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை, பொன்னேரி பகுதிகளிலிருந்து கரோனாவால் இறந்தவா்களை திருப்பத்தூா் மின் மயானத்திற்கு கொண்டுச் சென்று தகனம் செய்கின்றோம்.
நகரப்பகுதிக்குள் எங்களது பிரத்யேக ஆம்பூலன்ஸ் மூலம் இலவசமாக சடலங்களை கொண்டுச் செல்கிறோம். கிராமப்பகுதி எனில் குறைந்த கட்டணத்தில் சேவை செய்கிறோம் என்றனா்.