திருப்பத்தூர்
நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது
ஆம்பூரில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா்: ஆம்பூரில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் நகர போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாரின் (29) வீட்டை சோதனை செய்தனா். இதில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், போலீஸாா் அவரை கைது செய்தனா். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, மான் கொம்புகளை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.