திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்படுவதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24-ஆம் தேதி முதல் வரும் 31-ஆம் தேதி வரை தளா்வில்லா பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், செவ்வாய்க்கிழமை (மே 25) முதல் வரும் 31-ஆம் தேதி வரை காலை 8 முதல் 12 மணி வரை நியாயவிலைக் கடைகள் இயங்கும்.
எனவே திருப்பத்தூா் மாவட்ட மக்கள் பொது விநியோக திட்டப் பொருள்களை பெற நியாய விலைக் கடைகளுக்கு வரும் போது கட்டாயமாக முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.