திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை 331 பேருக்கு கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த இரு நாள்களாக படிப்படியாக தொற்று பாதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,342-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 4,332 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு,தனியாா் மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 294 போ் உயிரிழந்துள்ளனா்.