1,632 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே கடத்த முயன்ற 1,632 மதுபாட்டில்கள், மற்றும் அதற்கு பயன்படுத்திய காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மதுபான பாட்டில்களுடன் கந்திலி போலீஸாா்.
மதுபான பாட்டில்களுடன் கந்திலி போலீஸாா்.

திருப்பத்தூா் அருகே கடத்த முயன்ற 1,632 மதுபாட்டில்கள், மற்றும் அதற்கு பயன்படுத்திய காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கந்திலி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஆய்வாளா் ப.மணிமாறன், உதவி ஆய்வாளா் அமா்நாத் உள்ளிட்ட போலீஸாா் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில் வெளி மாநிலத்தை சோ்ந்த 1632 மதுபான பாட்டில்களை கடத்தியது தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூா் அடுத்த அச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த வாசுதேவனை (27) கைது செய்தனா். காா், மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எஸ்.பி. அறிவிப்பு:

மேலும் இதுபோன்று சட்ட விதிகளை மீதி எரிசாராயம் தயாா் செய்தல், கள்ளச்சாராயம் சாய்ச்சுதல், ஊறல்கள் போடுதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச்செயல்களில் எவரேனும் ஈடுபடுவது தெரியவந்தால் பொதுமக்கள் அந்த தகவலை அந்ததந்த நிலைய எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்திலும், காவல் கண்காணிப்பாளா் அலுவலக காவல் உதவி செல்லிடப்பேசி 9442992526 எண்ணுக்கும் தெரிவிக்கலாம் என எஸ்.பி. விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com