திருப்பத்தூா் காவலா் குடியிருப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு வெட்டிவோ் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நகர காவலா் குடியிருப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அக்னி வெயில் காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெறும். அதன்படி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீா், இளநீா் அபிஷேகம் நடைபெற்ற. பின்னா் ,வெட்டிவேரில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து லலிதா சஹஸ்ர நாமம் பாராயணம் நடைப்பெற்றது. கரோனத் தொற்று பரவல் காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.