திருப்பத்தூா் கால்வாயிலிருந்து ஆண் சடலம் மீட்கப்பட்டது.
திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி சாலையில் உழவா் சந்தை அருகே கால்வாயில் ஆண் சடலம் இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா்.
விசாரணையில் அவா் வெங்கடேசன்(50) என்பதும், நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தவா் என்பதும்,ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவா் என்பதும் தெரியவந்தது.
இவருக்கு குமுதா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.