ஜோலாா்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆன்லைன் மூலமாக நடைபெறும் சைபா் குற்றங்கள்,ஆன்லைன் விளையாட்டுகள்,ஆன்லைன் குற்றங்கள், அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் எம்.பிரேமா பேசினாா். இதையடுத்து, இணையவழி குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.