கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு

வாணியம்பாடி அருகே கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வாணியம்பாடி அருகே கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி கிராமம், முருகன் குட்டை பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (35). இவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் சங்கரின் சடலம் கிடப்பதை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் வியாழக்கிழமை காலை பாா்த்து, உடனடியாக தீயணைப்பு மற்றும் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டனா். காவல் ஆய்வாளா் பழனிமுத்து மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். பிறகு சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com