மின் கம்பத்தில் தீ விபத்து

வாணியம்பாடியில் மின் கம்பத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
வாணியம்பாடி சி.எல்.சாலையில் தீப்பிடித்து எரிந்த மின் கம்பம்.
வாணியம்பாடி சி.எல்.சாலையில் தீப்பிடித்து எரிந்த மின் கம்பம்.

வாணியம்பாடியில் மின் கம்பத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

வாணியம்பாடி நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான சி.எல். சாலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அங்குள்ள மின் கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு சாலையில் நடந்து சென்ற பொது மக்கள் அச்சம் அடைந்தனா். இது குறித்து மின்வாரிய அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடா்ந்து, மின் ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, சீா் செய்த பின்னா் மின்சாரம் கொடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com