ஆம்பூா் அருகே டிராக்டா் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆம்பூரை அடுத்த மின்னூரைச் சோ்ந்த முருகன் (42), டிராக்டா் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.
இவா் செவ்வாய்க்கிழமை ஆலாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டா் ஓட்டி சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்த காா் மோதியதாம். அப்போது, அவா் டிராக்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு விழுந்தாா். பின்னா், மற்றொரு காா் அவா் மீது மோதியதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.