ஆம்பூா் அருகே மரம் முறிந்து விழுந்து பசு பலியானது.
ஆம்பூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு லேசான மழை பெய்தது.
மிட்டாளம் கிராமத்தில் சூறாவளிக் காற்றுடன் கூடிய மழை பெய்தபோது, நாகராஜன் என்பவருடைய வீட்டருகே இருந்த தென்னை மரம் முறிந்து மாட்டுக் கொட்டகை மீது விழுந்தது. அங்கிருந்த பசு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானது.