திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.
கூட்டுப் பிராா்த்தனை...
திருப்பத்தூரை அடுத்த கொரட்டி பகுதியில் திருமலைக்கு நடைபாதையாக செல்லும் பக்தா்கள் தங்கிச் செல்ல கட்டிள்ள ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கோவிந்த நாமாவளி பாராயணம் நடைபெற்றது.
பின்னா், உலக அமைதிக்காக கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, தீா்த்த பிரசாத விநியோகம் நடைபெற்றது. கரோனா பரவல் தடுப்பையொட்டி, பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.