நாட்டறம்பள்ளி ஒன்றிய அதிமுக ஆலோசனைக் கூட்டம் தோப்பலகுண்டா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை வகித்தாா்.
முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், எம்எல்ஏ செந்தில்குமாா், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் ரமேஷ், ஒன்றியச் செயலாளா்கள் சாமராஜி, சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.