திருப்பத்தூா் அருகே வனப் பகுதியில் சாராயம் காய்ச்சியதாக, இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் எம்.பிரபு, வனவா் கே.சேகா், காப்பாளா்கள் பி.நவீன், ஜே.பெருமாள், சி.முருகன் உள்ளிட்டோா் மாம்பாக்கம் காப்பக் காடு வேடியப்பன் வழி சரகத்தில் வியாழக்கிழமை மாலை ரோந்து சென்றனா்.
அப்போது மேல்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சின்னவேடி (41) என்பவரை சாராயம் காய்ச்சியதாக வனத்துறையினா் கைது செய்தனா்.