பேரறிவாளனுக்கு 5-ஆவது முறையாக, ஞாயிற்றுக்கிழமை முதல் மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், பரோலில் வந்து சில மாதங்களாக தனது வீட்டில் உள்ளாா். இந்நிலையில், மீண்டும் 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என பேரறிவாளனின் தாயாா் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஞாயிற்றுக்கிழமை (செப். 26) முதல் மேலும் ஒரு மாத காலத்துக்கு தமிழக அரசு பரோல் நீட்டித்துள்ளது.