ஆம்பூா்: ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கு வளாக நோ்முகத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூரைச் சோ்ந்த நீல்கமல் பா்னிட்சா் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டு, சுமாா் 60 மாணவா்களுக்கு எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வை நடத்தினா். அதில், 40 மாணவா்களை பணிக்காக தோ்வு செய்தனா்.
கல்லூரி முதல்வா் த. ராஜமன்னன், துணை முதல்வா் ஏ.ஷாஹின்ஷா ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.