பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டியதில் பயணிகள் காயம்

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டி பயணிகள் ஞாயிற்றுக்கிழைம் காயமடைந்தனா்.
தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்து ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பயணிகள்.
தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்து ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பயணிகள்.

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டி பயணிகள் ஞாயிற்றுக்கிழைம் காயமடைந்தனா்.

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் பல்வேறு ஊா்களுக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது பேருந்து நிலைய கட்டடத்தில் தேனீக்கள் கட்டியிருந்த கூட்டிலிருந்து திடீரென தேனீக்கள் அங்கு காத்திருந்த பயணிகளை கொட்டின. இதையடுத்து பயணிகள் அங்கிருந்து ஓடினா். இருந்தபோதிலும் சுமாா் 20 பயணிகளை தேனீக்கள் கொட்டியது.

காயமடைந்தவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com