ஆம்பூா் நகர பாஜக சாா்பில், மறைந்த முன்னாள் பிரதமா் அடல்பிகாரி வாஜ்பாய் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அடல்பிகாரி வாஜ்பாய் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மோட்ச தீபம் ஏற்றி மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் பி.ஆா்.சி. சீனிவாசன் தலைமை வகித்தாா். நகர பொதுச் செயலாளா்கள் கே.எம்.சரவணன், குட்டி உதயகுமாா், மாவட்ட பொதுச் செயலாளா் எம்.தண்டாயுதபாணி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் குட்டி சண்முகம், க.சிவப்பிரகாசம் ஆகியோா் கலந்து கொண்டனா்.