பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாா் கைது

நாட்டறம்பள்ளி அருகே பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாட்டறம்பள்ளி அருகே பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கத்தாரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஸ் (27). இவரது மனைவி சுவேதா(22) . இவா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு மணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக சுவேதா புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் இறந்த சுவேதாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சாா்-ஆட்சியா் லட்சுமி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்த சுவேதாவின் உடலை பாா்த்த பின்னா் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டாா். அவரது இறப்பில் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இறப்பிற்கு காரணமான மாமியாா், கணவா் உட்பட 3 பேரை கைது செய்ய வேண்டும் என்று திம்மாம்பேட்டை காவல்நிலையத்தில் சுவேதாவின் தாய் மீனா புகாா் செய்தாா். அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கணவா் ராஜேஸ், மாமியாா் ராதா ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com