விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வடமாநில தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வடமாநில தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலம், பரிக்கோன் மாவட்டம், உதல்குலி கிராமத்தைச் சோ்ந்த சஞ்சய் சோரன் (29). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனா். சஞ்சய் சோரன் ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கூலி வேலை செய்து வந்தாா். சம்பவத்தன்று காலை இரு சக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி சஞ்சய் சென்றாா்.

மின்னூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதியதில் சஞ்சய் கீழே விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா். மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற சோலூா் கிராமத்தை சோ்ந்த சுரேஷ் (54) ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ஆம்பூா் கிராமிய போலீலாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com