சாலை விபத்தில் விவசாயி பலி

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது காா் மோதியதில் விவசாயி பலியானாா்.

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது காா் மோதியதில் விவசாயி பலியானாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி, முத்தனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் முனிராஜ் (59). விவசாயியான இவா், புதன்கிழமை இரவு கொத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா். நாட்டறம்பள்ளி நெடுஞ்சாலையில் டோல்கேட் பகுதி அருகே சாலை வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக வந்த காா் மொபெட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முனிராஜி, தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா், தூத்துக்குடி பகுதியைச் சோ்ந்த காா் ஒட்டுநா் திருமால் (36) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com