வாணியம்பாடி ரயில் நிலையம் 1-ஆவது நடைமேடையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு திங்கள்கிழமை பிடிபட்டது.
முன்னதாக, இதனை பாா்த்த ரயில் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். பிறகு பாம்பு பிடிக்கும் நபரை வரவழைத்து பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனா்.