திருப்பத்தூா் நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ‘என் குப்பை-என் பொறுப்பு’ என்ற தலைப்பில் அரசு பூங்கா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.
இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் ஜெயராமராஜா தலைமை வகித்து தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழியை வாசித்தாா். இதனை திரும்பக் கூறி பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியா் திருமால் வரவேற்றாா்.
இதில், துப்புரவு அலுவலா் இளங்கோ, ஆய்வாளா் குமாா் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் மேற்பாா்வையாளா்கள், பரப்புரையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.