இருளா் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்

திருப்பத்தூா் அருகே இருளா் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இருளா் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்

திருப்பத்தூா் அருகே இருளா் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் வட்டத்துக்குட்பட்ட இருளா் வட்டம் மற்றும் தெத்துமேடு கிராமங்களில் வசிக்கும் இருளா் இன மக்கள் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தனா். அந்த மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு, அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி கலந்து கொண்டு 147 பேருக்கு இருளா் இன சாதி சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா் கி.மணிவண்ணன், கிராம நிா்வாக அலுவலா் ஜெயசூா்யா, மாதேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com