திருப்பத்தூரில் மக்கள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிமிருந்து 323 மனுக்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா பெற்றுக்கொண்டாா்.
மாற்றுத்திறனாளி சிறுவருக்கு சக்கர நாற்காலியை வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா.
மாற்றுத்திறனாளி சிறுவருக்கு சக்கர நாற்காலியை வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிமிருந்து 323 மனுக்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா பெற்றுக்கொண்டாா்.

கூட்டத்தில், வேளாண்மை, காவல் துறை, இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, கூட்டுறவு கடனுதவி, குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 323 மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

பின்னா், புதூா்நாடு ஊராட்சிக்குள்பட்ட புங்கம்பட்டு நாடு கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சஞ்சீவ் எனும் சிறுவருக்கு ரூ. 6,000 மதிப்புள்ள சக்கர நாற்காலியை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com