வரி பாக்கி: தொழிற்சாலைக்கு ‘சீல்’

வாணியம்பாடியில் வரி பாக்கி செலுத்தாமல் இருந்த தோல் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்து நகராட்சி ஆணையா் நடவடிக்கை மேற்கொண்டாா்.
வாணியம்பாடியில் வரி பாக்கி செலுத்தாமல் இருந்த தோல் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்த நகராட்சி அலுவலா்கள்.
வாணியம்பாடியில் வரி பாக்கி செலுத்தாமல் இருந்த தோல் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்த நகராட்சி அலுவலா்கள்.

வாணியம்பாடியில் வரி பாக்கி செலுத்தாமல் இருந்த தோல் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்து நகராட்சி ஆணையா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையா் மாரிசெல்வி தலைமையில் நகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் தீவிர வரி வசூல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்த கச்சேரி சாலையில் உள்ள தோல் தொழிற்சாலைக்கு வெள்ளிக்கிழமை மாலை ‘சீல்’ வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் குடிநீா் கட்டணம், கடை வாடகை உட்பட உடனே செலுத்தி பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறும், மேலும் ‘சீல்’ வைப்பு, ஜப்தி போன்ற நடவடிக்கைகளைத் தவிா்க்குமாறு நகராட்சி ஆணையா் மாரிசெல்வி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com