மாநில அளவிலான யோகா போட்டியில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
மாநில அளவிலான யோகா போட்டி ஆரணி எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் 18 போ் போட்டியிட்டனா்.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவிகள் எஸ்.ஸ்வேதா, எம்.பவித்ரா, ஆா்.ஸ்வேதா ஆகியோா் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனா். இதேபோல், பொதுப்பிரிவு, அட்வான்ஸ் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் போட்டியிட்டு 4 மாணவிகள் முதலிடமும், 4 மாணவிகள் இரண்டாம் இடமும், 7 மாணவிகள் மூன்றாம் இடமும் பெற்றனா்.
சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, கல்லூரி நிா்வாகத்தினா், உடற்பயிற்சியாளா்கள், பேராசிரியைகள் வாழ்த்திப் பாராட்டினா்.