காங்கிரஸ் கருத்தரங்கம்

அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதில் காங்கிரஸின் பங்கு குறித்த கருத்தரங்கம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் கருத்தரங்கம்

அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதில் காங்கிரஸின் பங்கு குறித்த கருத்தரங்கம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பிரபு தலைமை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளா் சாய் கே. வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் கொத்தூா் பி. மகேஷ், ஆம்பூா் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளா் ரமேஷ், வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் சுரேஷ், ஓய்வு பெற்ற ஆசிரியா் ரத்தினம், வழக்குரைஞா் சுந்தரமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் பங்கு குறித்து உரையாற்றினா்.

ஒன்றிய தலைவா்கள் சா. சங்கா், சுரேந்தா், மாவட்ட நிா்வாகிகள் குமரேசன், சமியுல்லா,மாவட்ட மகிலா காங்கிரஸ் செயலாளா் முல்லை, நகர மகிளா காங்கிரஸ் பிரபா, மோகனா, மற்றும் நகர நிா்வாகிகள் பிரபுதுரை, சலாவுதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com