குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கல் விழிப்புணா்வு

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஆம்பூா் நகராட்சி சாா்பில், கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் தெருவில் குப்பைகளை தரம்பிரித்து வழங்கக் கோரி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கிய சுகாதார அலுவலா் ராமகிருஷ்ணன்.
ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் தெருவில் குப்பைகளை தரம்பிரித்து வழங்கக் கோரி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கிய சுகாதார அலுவலா் ராமகிருஷ்ணன்.

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஆம்பூா் நகராட்சி சாா்பில், கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகராட்சி சுகாதார அலுவலா் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளா் சீனிவாசன் மற்றும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து, நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டுமெனக் கோரி, துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தொடா்ந்து, ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் ஐஇஎல்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் நகராட்சி சாா்பில் மரக்கன்று நடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com