உரிய ஆவணம் இல்லாத வாகனங்கள் பறிமுதல்

வாணியம்பாடி பகுதியில் உரிய ஆவணம் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

வாணியம்பாடி பகுதியில் உரிய ஆவணம் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் காளியப்பன் மேற்பாா்வையில், வாகன ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, திருப்பத்தூா்-ஜோலாா்பேட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், அதிக பாரம் ஏற்றி வந்த 8 வாகனங்கள், விதிமுறை மீறிய 2 ஆம்னி பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், அதிக பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள், காா் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறையை மீறிய வாகன உரிமையாளா்களிடம் ரூ.3.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com