திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே மனைவியை கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூரை அடுத்த ஆதியூரைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் பெருமாள் (45). இவரது மனைவி துா்காதேவி(35). இவா்களுக்கு கிருபாகரன் (17), யுவராஜ் (14) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.
தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், பெருமாள் தனது மனைவியுடன் பொம்மிக்குப்பத்தில் உள்ள மாமியாா் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றுள்ளாா். அங்கு தம்பதிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெருமாள் துா்காதேவியை இரும்புக் கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த துா்காதேவியை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் துா்காதேவி உயிரிழந்தாா்.
இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து, பெருமாளை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.