வீடு புகுந்து கத்தியால் தாக்கி நகைக் கொள்ளை: 4 போ் கைது

திருப்பத்தூா் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியால் தாக்கி பெண்ணிடம் 4 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியால் தாக்கி பெண்ணிடம் 4 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் அருகே குரும்பேரியை அடுத்த கொல்லக் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி(75), விவசாயி. இவரது மனைவி சரோஜா(70). இவா்களது மகள் கல்யாணி (45). அரசுப் பள்ளியில் ஆசிரியையான இவா், திருமணமாகி வெளியூரில் வசிக்கிறாா்.

அண்மையில் சொந்த ஊரான குரும்பேரிக்கு வந்தாா்.

வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் மா்ம நபா்கள் 4 போ், மின் இணைப்பை துண்டித்து குப்புசாமியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கத்தியால் தாக்கி சரோஜா, கல்யாணி ஆகிய இருவரிடம் 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்த வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின்பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், காவல் துணை கண்காணிப்பாளா் சாந்தலிங்கம் தலைமையில் 3 தனிப்படையினா் மா்ம நபா்களை தேடி வந்தனா்.

இதனிடையே, திருப்பத்தூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதி ஒன்றில் நடந்த திருட்டு வழக்கில் ஈடுபட்ட திருப்பத்தூா் திருமால் நகா் ஏரி கோடி பகுதியைச் சோ்ந்த முருகன் (42) என்பவரை பிடித்து விசாரித்தனா்.

அவா் தெரிவித்த தகவலின்பேரில், ஜோலாா்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் பங்கியான் பகுதியில் வசிக்கும் சுரேஷ்(45), இவரது மகன் அரவிந்த் குமாா் (22), ஏலகிரி கிராமம் பெரியான் பகுதியில் வசிக்கும் ஸ்ரீகாந்த் (எ) சேட்டு (20) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com