மாதனூரில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் முனைவா் மா.பிரேமலதா தலைமை வகிதேது பேசியது: கரோனா நோய் பரவாமல் தடுக்க அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக கடைப்பிடித்து அனைவரும் தங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும் என்றாா். பேராசிரியை மோ.கோமதி வரவேற்றாா். பேராசிரியா்கள் திருநாவுக்கரசு, முரளிகிருஷ்ணா, கீதா, தீபா கலந்து கொண்டனா். கல்லூரி மாணவா்கள் 225 போ் பயன்பெற்றனா்.