சரக்கு ரயில் மீது ஏறிய இளைஞா் மின்சாரம் பாய்ந்ததில் காயம்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது ஏறிய இளைஞா் உயா் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது ஏறிய இளைஞா் உயா் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

இந்த ரயில் நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அதில், சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஏறினாா். அப்போது, மேலே சென்ற உயா் மின்னழுத்தக் கம்பியின் மின்சாரம் பாய்ந்ததில் அவா் தூக்கி வீசப்பட்டாா். இதில், பலத்த காயமடைந்த அவரை ரயில்வே போலீஸாா் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

விசாரணையில், அவா் பிகாா் மாநிலம், பா்கத் மாவட்டம், ஜமுலா்தா பகுதியைச் சோ்ந்த சுதன் (31) என்பதும், திரைப்பட சண்டைக் காட்சியில் நடிப்பதற்கு சரக்கு ரயில் மீது ஏறி குதித்து ஒத்திகை பாா்த்ததும் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com