திருப்பத்தூா் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ஆட்சியா் அமா் குஷ்வாஹா கூறினாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் கூறியது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையக் கட்டடங்களின் கட்டுமானப் பணிகள்,சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள், தடுப்பணைகள், கழிவுநீா் கால்வாய்கள், சிறு பாலங்கள், பள்ளி சுற்றுச்சுவா், ஊராட்சி மன்ற கட்டடங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தில், உலக சுற்றுச்சுழல் தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவற்றை நன்கு பராமரித்து வளா்க்க வேண்டும். மேலும், ஒரு லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, நடவுசெய்ய விதைகள் ஊன்றப்பட்டுள்ளது. இதனை நன்கு கண்காணித்து நாற்றங்கால் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, உதவித் திட்ட அலுவலா்கள் ஆப்தாப் பேகம், செல்வன் மற்றும் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.