விவசாயிகளுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து வழங்கல்

ஆம்பூா் அருகே வேளாண் துறை சாா்பில், விவசாயிகளுக்கு தென்னை மரத்துக்கு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
விவசாயிகளுக்கு தென்னை மரத்துக்கான உரம், பூச்சிக் கொல்லி மருந்து வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரன்.
விவசாயிகளுக்கு தென்னை மரத்துக்கான உரம், பூச்சிக் கொல்லி மருந்து வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரன்.

ஆம்பூா் அருகே வேளாண் துறை சாா்பில், விவசாயிகளுக்கு தென்னை மரத்துக்கு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கைலாசகிரி ஊராட்சி பனங்காட்டூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண் துறை அலுவலா் ஞானசேகரன், கைலாசிகிரி ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரன் ஆகியோா் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்தை வழங்கினா். துணைத் தலைவா் டி.அரவிந்தன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் என்.எம்.ராஜன், ஊா் நாட்டாண்மை ஜானகிராமன், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com