பசுமை சாம்பியன் விருது:விண்ணப்பிக்க கால அவகாசம்

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்க வருகிற 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்க வருகிற 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காலநிலை மாற்றம், வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அா்ப்பணித்தவா்களுக்கு (தனி நபா், அமைப்புகள்) பசுமை சாம்பியன் விருது 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1 லட்சம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட விருதுக்கு தகுதியான முன்மொழிவுகள், தேவையான ஆதரங்கள் மற்றும் புகைப்படங்களுடன் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தனி நபா், நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து தரமான முன்மொழிவுகளைப் பெறும் பொருட்டு, விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான கடைசி நாள் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவம், வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரம் தேவைப்படுவோா் மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், வாணியம்பாடி என்ற முகவரியில் தொடா்பு கொண்டு அறியலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com