குமாரமங்கலம் தண்டாயுதபாணி மடாலயத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி, குருபூஜை விழா, திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆம்பூா் அருகே உள்ள குமாரமங்கலம் தண்டாயுதபாணி மடாலயத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி, ஸ்ரீநிஜானந்தா சுவாமிகளின் பரம்பரை ஸ்ரீமுக்தானந்தா சுவாமிகளுக்கு 102-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு, செல்வ விநாயகா், வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சுவாமி வீதி உலா, ஊஞ்சல் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் திரளான பக்தா்கள் பால் காவடி எடுத்து வந்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.